Archive for செப்ரெம்பர், 2008
தமிழ் சினிமா குப்பை: சீமான் ஆவேசம்
மதுரை : தமிழ் சினிமாக்களில் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு எதுவும் இல்லாமல் குப்பையாகி போனதால், குறும் படங்கள் அவசியமாகி விட்டது என சினிமா இயக்குனர் சீமான் பேசினார்.மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில் நடந்த 4வது மேம்பாட்டு குறும்பட விழாவில் அவர் பேசியதாவது: திரைப்படத் துறையை சேர்ந்தவர்களை ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்கின்றனர். இவர்கள் என்ன தியாகங்களை செய்துள்ளனர். மதுரை சின்னப்பிள்ளையை அனுப்பி வைத்திருந்தால் தேசத்திற்கு கவுரவம் கிடைத்திருக்கும்.
இன்றைய இளைஞர்களுக்கு பகத்சிங், சுபாஷ்சந்திரபோஸ் போன்றவர்கள் யார் என தெரியவில்லை. நடிகர்களுக்கு “புரட்சி’ என்ற பெயரை அடைமொழியாக வைத்துள்ளனர். இவர்கள் என்ன புரட்சி செய்தார்களோ, எந்த நாட்டிற்கு “தளபதி’, “கேப்டன்’ என்பதும் தெரியவில்லை. நடிகர்களின் படங்களுக்கு பால் ஊற்றும் அவலம் இங்கு தான் உள்ளது. இருக்கின்ற பொழுதை நல்லபடியாக போக்குவதற்குத் தான் சினிமா என்ற நிலை மாறிவிட்டது. தமிழ் சினிமாக்கள் குப்பையாகி விட்டன. மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, ஏழ்மை என எதுவும் இல்லை. எனவே மக்களுக்கு இப்போது மாற்று ஊடகமாக குறும்படங்கள் அவசியமாகி உள்ளது. வணிக வாடை இல்லாமல் மக்களுக் கான படங்களாக குறும்படங்கள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். தானம் அறக்கட்டளை திட்ட இணையாளர் அமுதா வரவேற்றார். இயக்குனர் ராஜசேகர், மதுரை சின்னப்பிள்ளை, மம்மது உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தொகுத்து வழங்கினார். ரங்கநாதன் நன்றி கூறினார்.
சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவஞ்சலியின் போது அண்ணன் சீமான் பேசிய எழிச்சியுரை
சென்னை புதுப்பேட்டையில் ‘திராவிடர் கழக தமிழ் பேரவை’ சார்பில் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவஞ்சலியின் போது அண்ணன் சீமான் பேசிய எழிச்சியுரை