29ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
ஓகஸ்ட் 24, 2009 at 3:59 பிப 1 மறுமொழி
சிறீலங்காவில் போர் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும், 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். 20 நாடுகளின் துணையோடு தான் போரில் வெற்றி பெற்றதாக சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்துவதை அந்த 20 நாடுகளில் ஒன்று கூட கண்டிக்காதது ஏன்?
தமிழ் இனம் அங்கு அழிந்து கொண்டிருக்கிறது. அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.
இதை கண்டித்தும், ஐ.நா மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில், அங்குள்ள மக்களை மீள் குடியமர்த்தக்கூறியும், ‘நாம் தமிழர் இயக்கம்’ சார்லி ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம்.
மீண்டும், 29 ஆம் திகதி தூத்துக்குடியுல் பேரணி நடத்தவுள்ளோம்.
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை திருப்பும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நடத்துவோம். என சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆண்ட தமிழினம் அடைபட்டுக்கிடகுது முள்வேலி சிறைக்குள். அறுத்தெரிவோம் வாரீர் நாம் தமிழர் என உரக்க கோஷமிட்டு, இச்சந்திப்பை நிறைவு செய்துகொண்டார் இயக்குனர் சீமான்.
Entry filed under: நிகழ்வுகள்.
1 பின்னூட்டம் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Rajkumar | 5:52 பிப இல் ஓகஸ்ட் 25, 2009
thalaivar Seeman, Vazhka, valarka, naangal thunaiyaga iruppom………